Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவம் வெறித் தாக்குதல் - 1000 தமிழர்கள் படுகொலை

Subscribe to Oneindia Tamil

Injured Women in Vanni
வன்னி: வன்னியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கொடூரமான தாக்குதலை இன்று இலங்கைப் படைகள் மேற்கொண்டன. இதில் 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கொத்துக் குண்டுகள் உள்பட தங்களிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தி, வான்வழி மற்றும் தரை வழித் தாக்குதலை இன்று அதிகாலை முதல் இலங்கைப் படைகள் மேற்கொண்டன.

புதுக்குடியிருப்புப் பகுதியில் இந்த பயங்கர தாக்குதல் இன்று அதிகாலை தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் தாக்குதல் நடந்தது.

மேலும், பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

அனைத்து வகை பேரழிவு ஆயுதங்களையும் கொண்டு இலங்கைப் படைகள் மூர்க்கத்தனமாக நடத்திய இந்தத் தாக்குதலில், 1000க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஏற்கனவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற அப்பாவி மக்களை மனிதக் கேடயமாகக் கொண்டு வெறித்தனமாக தாக்கியுள்ளது இலங்கை ராணுவம்.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

புலிகளுக்கு 24 மணி நேர கெடு

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருப்பவர்களும் இன்னும் 24 மணி நேரத்திற்குள் சரணடைந்து விட வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரித்து கெடு விதித்துள்ளார்.

இதையடுத்து கெடு முடிந்த பின்னர் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் குறி வைத்து இலங்கைப் படைகள் தாக்கக் கூடும் என்ற பேரச்சம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+