புலிகளுடன் பேச இலங்கை அரசு முயற்சிக்கிறது - ரணில் தகவல்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் பேச இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
கொழும்பு, நீர்க்கொழும்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, விடுதலைப் புலிகளின் புதிய சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதனுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தான் விரும்புவதாக அதிபர் ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் அவர்களுடனான போர் நிறுத்த உடன்படிக்கையை நான் கையெழுத்திட்டதாக அரசு குற்றம் சாட்டுகிறது.
நான் அவ்வாறு செய்திருந்தால் விடுதலைப் புலிகள் என்னைத்தான் அதிபராக்கியிருப்பார்கள். ஆனால், அவர்கள் அதிபர் தேர்தலில் என்னைத் தோற்கடிக்கும் வகையில் செயற்பட்டது நான் தேசத்துக்குத் துரோகம் செய்யவில்லை என்பதை புலப்படுத்துகின்றது.
சமாதான முயற்சிகளும் போர் நிறுத்த முயற்சியும் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தினான் எடுக்கப்பட்டவை.
ஏற்கனவே தொடங்கப்பட்ட அந்த முயற்சியை நான் தொடர்ந்து நடத்தினேன் என்றார் ரணில்.












Click it and Unblock the Notifications