கன்னியாகுமரியில் இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஸ்டாலின்
நாகர்கோவில்: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி தொகுதியில் தொடங்குகிறார்.
இன்றும் நாளையும் அவர் கன்னியாகுமரி வேட்பாளர் ஹெலன் டேவிட்சனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
22ம் தேதி தூத்துக்குடி தொகுதியிலும், 23ம் தேதி விருதுநகர் தொகுதியிலும், அவர் பிரச்சாரம் செய்கிறார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
இதற்காக இன்று, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வருகிறார். பிற்பகல் 3 மணிக்கு குமரி-கேரள எல்லையான களியாக்கவிளையில் அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். இரவு 9.45க்கு தக்களையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
21ம் தேதி பகல் 3 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் அவர் இரவு 9.40க்கு ஆரல்வாய்மொழியில் பிரசாரத்தை நி்றைவு செய்கிறார்.
2 நாட்களும் 55க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications