ராகிங்-மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை
அகமதாபாத்: ராகிங் காரணமாக அகமதாபாத் கல்லூரி மாணவி ஒருவர் விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிங்கி நர்சிங் பயிற்சி கல்லூரியில் அங்கிதா வெக்தா என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் கல்லூரி விடுதியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் தனது மகளின் மரணத்துக்கு ராகிங் தான் காரணம் என அவரது தந்தை கணபத் வெத்கா கூறியுள்ளார். அவர் கூறுகையில், எனது மகள் கல்லூரியில் ராகிங் நடப்பதாக எங்களிடம் கூறியுள்ளார். ராகிங்க காரணமாக தான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றார்.
இறந்த போன மாணவியின் தாயாரும், தங்கையும் சில மூத்த மாணவிகளின் ராகிங் காரணமாக அங்கிதா இறந்து போனதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இதை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் இது கொலையா, தற்கொலையா அல்லது அவர் ராகிங் மூலம் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பது தெரிய வரும். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications