காங்கிரஸ் ஏஜென்ட் ஆன தேர்தல் ஆணையம்-மாயாவதி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: தேர்தல் ஆணையம் மொத்தமும் காங்கிரஸ் கட்சியின் ஏஜென்ட் ஆகி விட்டது. காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தையும் ஒழிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று பகுஜன் சமாஜ் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராகி விட்டார். எனவே நேர்மையான, நியாயமான தேர்தலை இனி நாம் எதிர்பார்க்க முடியாது.
ஒரு தலித் மகள் பிரமதராவதை அவர்கள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த தேர்தல் ஆணையமும் காங்கிரஸ் கட்சியின் ஏஜென்ட் ஆக மாறி விட்டது என்று காட்டமாக கூறினார் மாயாவதி.












Click it and Unblock the Notifications