ஜார்க்கண்ட்-தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil
மேதினிநகர் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம் பலமாவ் மாவட்டத்தில் மேதினி நகர் என்ற இடத்தில் ரயில் நிலையத்தையும், தண்டவாளத்தையும் நக்சலைட்டுகள் குண்டு வைத்துத் தகர்த்தனர்.
இதனால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேதினி நகரில் உள்ள சினாகி ரயில் நிலையக் கட்டடம் இதில் முழுமையாக சேதமடைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தையும் குண்டு வைத்து நக்சலைட்டுகள் தகர்த்து விட்டனர்.
பலமாவ் லோக்சபா தொகுதியில், ஏப்ரல் 16ம் தேதியே லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநிலத்தில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடந்து வருவது நினைவு கூறத்தக்கது.












Click it and Unblock the Notifications