நான் பேச நினைத்ததெல்லாம்-நாஞ்சில் சம்பத்!
கோவை: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மதிமுக.கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கோவை சிறையில் இருந்து விடுதலையானார்.
திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக மதிமுககொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்தை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
இந்திய இறையாண்மைக்கு விரோதமாக தொடர்ந்து அவர் பேசி வந்ததாக கூறி தேசப் பாதுகாப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து நாஞ்சில் சம்பத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நாஞ்சில் சம்பத்துக்கு ஆதரவாக வைகோவே நேரில் ஆஜராகி வாதாடினார். இதனையடுத்து, அவரை சென்னனை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாஞ்சில் சம்பத், 46 நாட்களுக்கு பின் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ள இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்திருந்தேன். சிறையில் அடைக்கப்பட்டதால் அங்கு எல்லாம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சிறையில் இருந்த காலத்தில் 'நான் பேச நினைத்ததெல்லாம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகமும், 'தேச பாதுகாப்பு சட்டத்தில் நான்' என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளேன். இந்த இரு புத்தகங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
-
சட்டசபை தேர்தலில் வைகோ போட்டி? எந்த தொகுதி தெரியுமா? தீப்பிடிக்க போகும் தீப்பெட்டி! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications