அதிமுகவுக்கு மட்டும் ஆதரவு-சிவசேனா
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் சிவசேனா அதிமுகவிற்கு மட்டும் ஆதரவு கொடுப்போம் என அக்கட்சியின் மாநில தலைவர் எல் சுபாஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ளாததால் அவர்களுக்கு எதிராக அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற சிவசேனா தொண்டர்கள் 23 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்வோம்.
கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர பாமக, மதிமுக தலைவர்கள் ஆதரவு கேட்டால் அவர்களுக்கும் நாங்கள் பிரசாரம் செய்வோம். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கிறோம் என்றார்.
அதிமுக அணிக்கு பிஸ்வாஸ் பிரச்சாரம்:
இந் நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பார்வர்டு பிளாக் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மே 7ம் தேதி சென்னை, பாண்டிச்சேரியிலும், மே 8ம் தேதி மதுரை, தேனியிலும், மே 9ம் தேதி விருதுநகர், தென்காசியிலும் பிரச்சாரம் செய்கிறார்.