For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் வந்த 10,000 துணை ராணுவப் படையினர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 10,000க்கும் மேற்பட்ட மத்தியப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

பதற்றமான வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு மாநில போலீசாருடன் பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதுவரை 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். இந்த 10,000 வீரர்களும் மாநிலம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் சில ஆயிரம் வீரர்களும் வரவுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். அங்கு தேர்தல் முடிந்துவிட்டதால் அவர்கள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அனைத்து தொகுதிகளிலும் இந்தப் படையினர் கொடி அணி வகுப்பும் நடத்தவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X