Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை - இன்று 32, நேற்று 174 தமிழர்கள் படுகொலை

Subscribe to Oneindia Tamil

Injured boy
வன்னி: இலங்கையின் வட பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம் பெயர்ந்த தமிழர்கள் வசித்து வரும் குடியிருப்புகளை நேற்று இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்கியது. இதில் 174 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று நடந்த தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வரும் குடியிருப்புகள் மீது சனிக்கிழமை பிற்பகல் இலங்கை விமானப்படையின் கிபிர், மிக் உள்ளிட்ட போர் விமானங்களைக் கொண்டு இலங்கை விமானப்படை கொடும் தாக்குதலை நடத்தியது.

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடந்த இந்தத் தாக்குதலின்போது 16 குண்டுகள் வீசப்பட்டன. இதில் 18 கூடாரங்கள் எரிந்து நாசமாகின. 6 வீடுகள் அழிந்து போயின. 126 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் மீண்டும் மாலை 4 மணியளவில் 12 குண்டுகளை வீசியும், 4.0 மணிக்கு 8 குண்டுகளையும் வீசித் தாக்கியது இலங்கை விமானப்படை.

இந்த இரு சம்பவங்களிலும் 48 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அதேசமயம், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் ராணுவம் நேற்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இன்று..

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதியில் இன்று காலை விமானப்படை விமானங்கள் குண்டுளை வீசித் தாக்கின.

இதில் 32 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயமடைந்தனர்.

இன்று காலை 7 மணிக்கும், பின்னர் பத்தே கால், மறுடியும் 11 மணி என 3 முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.


மொத்தம் 38 குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் தங்கியிருந்த பல்வேறு முகாம் இல்லங்கள் இதில் சேதமடைந்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+