புதிய தமிழகத்திற்கு ஆதரவு எதிரொலி - கார்த்திக் மன்றம் கலைப்பு
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், புதிய தமிழகம் கட்சியுடன் கார்த்திக் கூட்டணி வைத்துக் கொண்டதைக் கண்டித்து அவரது ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது.
மேலக்கடையநல்லூரில் பாண்டிநாட்டு தங்கம் கார்த்திக் ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கருப்பையா, துணை தலைவராக ஐயப்பன், செயலாளராக ராஜூ, பொருளாளராக சாமி ஆகியோர் உள்ளனர்.
இதில் ஏராளமான உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் கார்த்திக் தொடங்கிய நாடாளும் மக்கள் கட்சியிலும் இவர்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
கார்த்திக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலக்கடையநல்லூர் பாண்டிநாட்டு தங்கம் கார்த்திக் ரசிகர் மன்றத்தினர் மன்றத்தை கலைத்ததோடு அவரது கட்-அவுட்டையும் கிழித்து எறிந்தனர்.












Click it and Unblock the Notifications