என்னையும் பலி கொடுக்க தயார்-கருணாநிதி
சென்னை: இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அதிபர் ராஜபக்சே கொன்று குவித்துள்ளார். அதே போல என்னையும் கொல்லட்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உண்ணாவிரதம் இருந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
புலிகள் நேற்று போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இதனால் நேற்று இலங்கையில் போர் நிறுத்தம் வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். நேற்று இரவுமுழுவதும் கண்விழித்து இலங்கையில் இருதரப்பிலும் போர் நிறுத்த அறிவிப்பு வந்துவிடாதா என்று ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், அதைக் கூட ராஜபக்சே ஏற்க மறுத்துள்ளார்.
அப்பாவிகளைக் காக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளையும் ஏற்கவில்லை. இதனால் அங்கு தீவிரமான நடவடிக்கையில் இந்தியா இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதை வலியுறுத்தியே நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றார்.
போர் நிறுத்தம் கோரித்தான் இந்த உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளேன்.
என்னைப் பின்பற்றி யாரும் இவ்வாறு உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். இந்த பிரச்னையில் என்னை மட்டும் நான் பலிகொடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்ற என் கோரிக்கையை திமுகவினர் கட்டளையாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அதிபர் ராஜபக்சே கொன்று குவித்துள்ளார். அதே போல என்னையும் பலி கொடுக்க நான் தயார் என்றார்.