ஈழத் தமிழர்களுக்கு உதவ ரூ. 100 கோடி நிதி - மன்மோகன் அறிவிப்பு
டெல்லி: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நல்வாழ்வுக்காக ரூ. 100 கோடி நிதியை அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
போர்ப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை:
போர் நடவடிக்கைகள் முற்று பெற்று விட்டது என்றும், கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித்தாக்கும் போர் ஆயுதங்கள் போன்றவை, குடிமக்களை பெருமளவுக்கு கொல்லும் என்பதால், இலங்கை பாதுகாப்பு படைகள் அவற்றை பயன்படுத்தக்கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
மக்களை மீட்பதற்கும், அவர்களை காப்பாற்றுவதற்கும், தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கை பாதுகாப்பு படைகள் இனி கவனம் செலுத்தும்.
போர் முனையில் சிக்கிக்கொண்டு உள்ள தமிழ்க்குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றை தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்.
போர் முனையில் இருந்து வெளி வந்தோரின் துயரங்களை தணிப்பது மட்டும் இன்றி, போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கி இருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்.
போர் பகுதியில் இருந்து வெளி கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்திய பிரதமர் அவர்கள் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிதியை பயன்படுத்துவதற்கான விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications