வன்னியிலிருந்து தப்பி யாலா காட்டில் பிரபாகரன்?

இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. சிங்கள ராணுவ அதிகாரிகளும் இதையே கூறிவந்தனர்.
ஆனால், நிலைமை கை மீறும்போது, நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல பிரபாகரன் திட்டம் வைத்திருந்ததாக ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் தெரிவித்ததாக ராணுவம் கூறியது.
இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்தார்.
ஆனால், போர் பகுதியில் இருந்து பிரபாகரனும் முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களும் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர் பகுதியில் பிரபாகரன் தற்போது இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள யாலா காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டிருக்கலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது.
இது உண்மையானால், இலங்கை ராணுவத்துக்கு இதை மிகப்பெரிய அதிர்ச்சி வேறு இருக்காது என இலங்கை ஆதரவு இணைய தளங்கள் கூறியுள்ளன. இதனால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கிழக்கு மாகாணம் ஏற்கெனவே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, ராணுவத்தின் கைக்குப் போய்விட்டது. ஆனாலும் அங்கு புலிகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கொரில்லா முறையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
யாலா காட்டுப் பகுதியில் சமீபத்தில் பெரும் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications