புதிய தமிழகம், மனித நேய கட்சிக்கு ரயில் என்ஜின்
சென்னை: புதிய தமிழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு ரயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் உமாத், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவும் மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர் அலியும் ராமநாதபுரத்தில் சலிமுல்லா கானும் பொள்ளாச்சியில் உமரும் போட்டியிடுகின்றனர்.
இந்த 5 பேருக்கும் ரயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சரத்துக்காக புதிய தமிழகம் போட்டி வாபஸ்:
இந் நிலையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ கட்சிக்காகவே 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நெல்லையில் நிருபர்களிடம் பேசிய அவர், கடந்த 1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தென்காசியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இம்முறை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சரத்குமார் கட்சியின் வேட்பாளர்களுக்காக நெல்லை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்துள்ளேன். அதே போல சமூக நல்லிணக்கத்தோடு சரத்குமாரும் கார்த்திக்கும் எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
சரத்குமார், கார்த்திக் ஆகியோரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர்கள் எனக்காக தென்காசி தொகுதியில் பிரசாரம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
விருதுநகர் தொகுதியில் கார்த்திக்குக்கும் மற்றும் நெல்லையில் சரத்குமாருக்கும் முறைப்படி ஆதரவு கொடுப்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். எனக்கு திமுக, அதிமுக தொண்டர்கள் ஆதரவு தந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றார்.
கிருஷ்ணசாமி இவ்வாறு கூறினாலும் அவரை ஆதரிக்கத் தயாராக இல்லை என்று பாஜக கூட்டணியில் உள்ள சரத்குமார் கூறிவிட்டது நினைவுகூறத்தக்கது.
கொங்கு முன்னேற்ற பேரவைக்கு சிலிண்டர் சின்னம்:
கொங்கு முன்னேற்ற பேரவை கட்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டெர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி மொத்தம் பணிரெண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பேரவையின் தலைவர் திரு. பெஸ்ட் ராமசாமி பொள்ளாச்சி தொகுதியிலும், பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோவை தொகுதியிலும், கெளரவத் தலைவர் தேவராஜன் நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இக் கட்சியின் சார்பில் மே 1ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கொங்குநாடு பொது தொழிலாளர் பேரவையும் துவக்கப்படுகிறது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications