புதிய தமிழகம், மனித நேய கட்சிக்கு ரயில் என்ஜின்
சென்னை: புதிய தமிழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு ரயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் உமாத், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவும் மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர் அலியும் ராமநாதபுரத்தில் சலிமுல்லா கானும் பொள்ளாச்சியில் உமரும் போட்டியிடுகின்றனர்.
இந்த 5 பேருக்கும் ரயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சரத்துக்காக புதிய தமிழகம் போட்டி வாபஸ்:
இந் நிலையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ கட்சிக்காகவே 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நெல்லையில் நிருபர்களிடம் பேசிய அவர், கடந்த 1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தென்காசியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இம்முறை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சரத்குமார் கட்சியின் வேட்பாளர்களுக்காக நெல்லை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்துள்ளேன். அதே போல சமூக நல்லிணக்கத்தோடு சரத்குமாரும் கார்த்திக்கும் எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
சரத்குமார், கார்த்திக் ஆகியோரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர்கள் எனக்காக தென்காசி தொகுதியில் பிரசாரம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
விருதுநகர் தொகுதியில் கார்த்திக்குக்கும் மற்றும் நெல்லையில் சரத்குமாருக்கும் முறைப்படி ஆதரவு கொடுப்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். எனக்கு திமுக, அதிமுக தொண்டர்கள் ஆதரவு தந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றார்.
கிருஷ்ணசாமி இவ்வாறு கூறினாலும் அவரை ஆதரிக்கத் தயாராக இல்லை என்று பாஜக கூட்டணியில் உள்ள சரத்குமார் கூறிவிட்டது நினைவுகூறத்தக்கது.
கொங்கு முன்னேற்ற பேரவைக்கு சிலிண்டர் சின்னம்:
கொங்கு முன்னேற்ற பேரவை கட்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டெர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி மொத்தம் பணிரெண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பேரவையின் தலைவர் திரு. பெஸ்ட் ராமசாமி பொள்ளாச்சி தொகுதியிலும், பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோவை தொகுதியிலும், கெளரவத் தலைவர் தேவராஜன் நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இக் கட்சியின் சார்பில் மே 1ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கொங்குநாடு பொது தொழிலாளர் பேரவையும் துவக்கப்படுகிறது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications