For Daily Alerts
Just In
இந்த வார பணவீக்கம் 0.57 சதவீதம்!
டெல்லி: இந்தியப் பணவீக்கம் மேலும் சிறிது உயர்ந்தது. ஏப்ரல் 18ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கான பணவீக்கம் 0.26 சதவீதத்திலிருந்து 0.57 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சில வகை எரி பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை உயர்வு, பண அளிப்பில் ரிசர்வ் வங்கி காட்டி வரும் முன்னெச்சரிக்கை காரணமாக பூஜ்யத்தை நோக்கிப் போகாமல் சற்றே ஏற்றம் கண்டுள்ளது பணவீக்கம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எண்ணெய்ப் பொருள்களின் விலையில் கணிசமான உயர்வு தெரிந்தது. தேயிலையின் விலை 7 சதவீதமும், பயறு வகைகளின் விலை 5 சதவிகிதமும் அதிகரித்திருந்தன.
மூன்றாம் கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் பணவீக்கத்தின் அளவு படிப்படியாக அதிகரிப்பது முக்கியத்துவம் பெறுவதாக ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, April 30, 2009, 15:43 [IST]