இந்திய காப்பி ஏற்றுமதி பாதிப்பு!
மும்பை: மோசமான பருவநிலை காரணமாக காப்பி உற்பத்தி 5 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் காப்பி ஏற்றுமதி அளவும் 17 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்த ஆண்டு 276000 டன்கள் உற்பத்தியாகவேண்டிய காப்பி, 262000 டன்களாகக் குறைந்துவிட்டது.
உற்பத்திக் குறைவு மர்றும் சர்வதேச அளவில் காப்பிக்கான தேவை குறைந்துவிட்டதால் ஏற்றுமதியில் அது எதிரொலித்துள்ளது. இந்த காலாண்டில் 73288 டன்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஆனால் இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 89651 டன்கள் ஏற்றுமதியாகியிருந்தது.
காப்பி அதிகம் விளையும் கர்நாடகத்தின் கூர்க் உள்ளிட்ட பகுதிகலில் பருவநிலை சரியில்லாததால்தான் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டதாக காப்பி வாரிய தலைவர் கிரு்ணா ராவ் கூறியுள்ளார். ஆனால் கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளில் எதிர்ப்பார்த்தை விட சிறப்பாக காப்பி விளைச்சல் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பக்கம் உற்பத்திக் குறைவென்றால், மறுபக்கம் வெளிநாடுகளில் காப்பிக்கான தேவை குறைந்திருப்பதும் ஏற்றுமதியை பாதித்துள்ளதாம், ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகள் இந்த காலாண்டில் தங்கள் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டுள்ளன. அதே போல ஐரோப்பிய சந்தைகளிலும் காப்பிக்கான தேவை கணிசமாகக் குறைந்துவிட்டதாக காப்பி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ரமேஷ்ராஜா கூறியுள்ளார்.