பிரான்ஸ், பிரிட்டன் அமைச்சர்கள்-கோதபய வாக்குவாதம்

நேற்று முன் தினம் அங்கு சென்ற இரு அமைச்சர்களும் உடனடியாக தமிழர் பகுதிகளில் தாக்குதலை நிறுத்துமாறும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட ஐ.நா.வுக்கு அனுமதி தருமாறும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை இலங்கை ஏற்கவில்லை.
அப்போது அவர்களுக்கும் அதிபரின் தம்பியான கோதபய ராஜபக்சேவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
2 லட்சம் தமிழர்களை மீட்டுவிட்டதாக கோதபய கூறியபோது இடைமறித்த மில்லிபேண்ட், பாதுகாப்பு வளையத்துக்குள் நீங்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறீர்கள். அதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.
இதை மறுத்த கோதபய, புலிகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு பேசாதீர்கள். உங்கள் நாட்டு பிபிசி செய்தி நிறுவனம் கூட புலிகளின் செல்லும் செய்திகளை அப்படியே வெளியிடுகிறது என்றார்.
இதனால் கடு்ப்பான மில்லிபேண்ட், நான் புலிகளோ அல்லது பிபிசியோ கேட்டுக் கொண்டு பேசுபவன் அல்ல. இது தொடர்பாக போர் முனையில் இருந்து பிரிட்டனுக்கு திட்டவட்டமாக செய்திகள் கிடைத்துள்ளன என்றார்.
இதற்கு கோதபய, நீ்ங்கள் புலிகளை நம்புவதா அல்லது பொறுப்பான ஒரு அரசை நம்புவதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்றார்.
அப்போது பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட், புலிகளிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் தமிழர்களை மீட்க ஐ.நாவை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டபோது பதில் சொல்ல முடியாத கோதபய, இது விஷயத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார் கோபமாக.
நானே கூட அந்தப் பகுதிக்குச் செல்லத் தயார் என்று பெர்னார்ட் கூறியபோது, அது உங்களுக்குப் பாதுகாப்பானது அல்ல என்றார் கோதபய. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என பெர்னார்ட் கூறியபோது, உங்களையே கூட புலிகள் பணயக் கைதியாக பிடித்துக் வைத்துக் கொள்ளலாம் என்று கோதபய கூறியுள்ளார்.
அதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை என்று பெர்னார்ட் கூறியபோது, உங்களை புலிகள் என்ன செய்வார்கள் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், நீங்கள் அங்கு சென்றால் பிரபாகரனைப் பிடிக்கும் எங்களது முயற்சிகளில் பின்னடைவு ஏற்படுபம். இதனால் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது என கோதபய திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதையடுத்து அதிபர் ராஜபக்சே அளித்த ஒரு பேட்டியில், எனக்கு ஐரோப்பிய நாடுகளின் போதனைகள் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications