ஸ்வைன் ப்ளூ-அமெரிக்காவில் குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil

இந்த நோய் நாட்டின் 11 மாகாணங்களுக்குப் பரவியுள்ளதால் 300 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.
இதுவரை மெக்சிகோவில் மட்டுமே 150 பேர் பலியாகியிருந்தனர். மேலும் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அமெரிக்காவிலும் முதல் உயிர் பறிபோய்விட்டது. 23 மாதமே ஆன அந்தத் குழந்தை டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்ததாகும். இந்தக் குழந்தை மெக்சிகோவை சேர்ந்ததாகும். சமீபத்தில் டெக்ஸாஸ் வந்தது.
இப்போது இந்த நோய் அரிசோனா, கலிபோர்னியா, இன்டியானா, கான்சாஸ், மசாசூசெட்ஸ், மிச்சிகன், நெவாடா, நியூயார்க், ஓகியோ, செளத் கரோலினா, டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களுக்கும் பரவியுள்ளது.
இதையடுத்து இங்குள்ள சுமார் 300 பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன.
இந்தக் காய்ச்சல் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களுக்கும் பரவிவிட்டது. ஆப்பிரிக்கா கண்டம் மட்டுமே தப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications