விருதுநகரில் கார்த்திக்கிற்கு எதிராக பிரசாரம்-பார்வார்டு பிளாக் முடிவு
நெல்லை: விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக்குக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய நெல்லை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது.
நெல்லையில் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் பாலு தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் கருணாகர பாண்டியன், தங்கப்பாண்டியன், தென்றல் நடராஜன், சக்தி சங்கரநாராயணன், ராஜவேலு, அய்யனார் பாண்டியன், குமார், சொக்கலிங்கம், பசும்பொன் குமார், பூல்பாண்டியன், மகராஜன், முத்தையா, சின்னதுரை, பி்ச்சிமணி, பச்சை, ஆறுமுகராஜன், கணேசன், வள்ளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நெல்லை, தென்காசி தொகுதிகளில் அதிமுக அணிக்கு ஓட்டு சேகரிப்பது, விருதுநகர் தொகுயில் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக்கு எதிராக பிரசாரம் செய்வது, விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரான வைகோவின் வெற்றிக்கு பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.