ஆரத்தித் தட்டில் கை வைக்கும் கழக நிர்வாகிகள் !
மதுரை: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தட்டில் பணம் போடுவது வேட்பாளர்களின் வாடிக்கை. அதில் கூட கட்சி நிர்வாகிகள் சிலர் ஊழல் செய்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வாக்களார்களை தேடித் தேடிச் சென்று வாக்கு சேகரித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு செல்லும் இடத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வருகின்றனர். அவ்வாறு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தட்டில் ரூ 10 முதல் 100 வரை போடுவது வழக்கம்.
இவ்வாறு ஒரு பகுதியில் சுமார் 25 தட்டுக்கள் இருந்தால் அதில் 15 தட்டுக்களுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகையை போட்டு விட்டு மீதி பணத்தை வேட்பாளருடன் வரும் கட்சி நிர்வாகிகள் சிலர் ஜூட் விட்டு விடுகின்றனராம்.
இதைக் கண்டு கொதித்துப் போன மக்கள் இதை வெளியே சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.
வேட்பாளர்களே உஷார் .... உஷார் ......












Click it and Unblock the Notifications