For Daily Alerts
Just In
காங்கிரஸும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் - பிருந்தா காரத்
டெல்லி: காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி வைக்கும் எண்ணமே இடதுசாரிகளுக்கு இல்லை என சிபிஎம் தலைவர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி வைக்கலாம் என பிரதமர் தெரிவித்த கருத்து குறித்து பிருந்தா காரத் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் எங்களது நிலையை ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டோம். காங்கிரஸுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.
காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவுடனும் சரி, எங்களால் கூட்டணி வைக்க முடியாது. அதற்கு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உள்ளன. பாஜகவின் கையில் மதச்சார்பின்மை பாதுகாப்பாக இல்லை.
3வது அணிதான் அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கும். மூன்றாவது அணியில் இடதுசாரிகள் உறுதியான இடத்தில் உள்ளனர் என்றார்.
Comments
இந்தியா கூட்டணி இடதுசாரிகள் மறுப்பு மன்மோகன் சிங் refutes brinda karat election 2009 தேர்தல் 2009 பிருந்தா காரத்
Story first published: Sunday, May 3, 2009, 14:03 [IST]