சத்யம்: கூடுதல் ஆர்டர் தந்த நெஸ்லே, நிஸ்ஸான்!
டெல்லி: டெக் மகிந்திரா வசமாகிவிட்ட சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சி செய்தி. சத்யம் நிறுவனத்தின் மூன்று பெரிய வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்துடனா ஒப்பந்தங்ககள் இனியும் தொடரும் என அறிவித்துள்ளன.
நெஸ்லே, நிஸ்ஸான் போன்றவை ஏற்கெனவே சத்யம் நிறுவனத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தன. இப்போது சிஐபிஏ நிறுவனமும் சத்யத்துடனான வர்த்தக உறவுகள் தொடரும் என அறிவித்துள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கெனவே கொடுத்த ஆர்டர்களை விட கூடுதலாகவே இந்த முறை ஆர்டர்கள் கொடுத்துள்ளதாக சத்யம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல... சத்யம் நிறுவனத்தை வாங்கும் வரை, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தில க்ளையண்டுகளே அந்த நிறுவனத்திலிருந்து விலகப் போவதாகக் கூறிவந்தன. இப்போது சத்யம் நிறுவனம் வாங்கப்பட்ட பிறகு, அவர்கள் அனைவரும் தொடர்ந்து டெக் மஹிந்திராவுடனே இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவிட்ஸர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் சத்யம் ஊழியர்களுக்கான விசா வழங்க சில கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது டெக் மஹிந்திராவும் சத்யமும் இணைந்ததன் பலனாக, இந்த நாடுகள் தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.












Click it and Unblock the Notifications