'தம்' அடி இல்ல... தண்டனை-சீன அரசு வினோத உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Smoking
பீஜிங்: மத்திய சீனாவை சேர்ந்த மாகாண அரசு ஒன்று, அங்கு தயாரிக்கப்படும் 2.5 லட்சம் பாக்கெட் சீகரெட்டுகளை ஊதித்தள்ளும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

புகை பிடிப்பது உடலுக்கு கேடு என நம்மூரில் தடை கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், நமது அண்டை நாடான சீனாவில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

மத்திய சீன பகுதியில் ஹூபை மாகாணத்தி்ல் உள்ள கோங் ஆன் என்ற கவுண்டி அரசு அங்கிருக்கும் அரசு ஊழியர்களை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2.3 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகளை ஊதித்தள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் ஹூபை மாகாண சிகரெட்டுகளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இதில் என்ன கொடுமை என்றால் ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களும் இவ்வளவு சிகரெட் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி குறைவாக சிகரெட் பிடிக்கும் துறை மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம் அங்கு பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் என அந்த அரசு நம்புவதாக தெரிகிறது. இது குறித்து கோங் ஆன் சிகரெட் சந்தையின் மேற்பார்வையாளர் சென் நியான்சு கூறுகையில், சிகரெட் வரி மூலம் கிடைக்கும் பணத்தால் பொருளாதாரம் உயரும். இதன்மூலம் உள்ளூர் சிகெரட் கம்பெனிகாரர்கள் நலிவடையமாட்டார்கள் என்றார் அவர்.

ஏற்கனவே சீனாவில் 35 கோடி பேருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகளை விளக்க வேண்டிய ஆண் டாக்டர்களில் பாதிக்கு மேல் இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள். மேலும் புகை பிடிப்பதன் காரணமாக ஒரு ஆண்டில் மரணமடைவர்களின் எண்ணிக்கை 10 லட்சம்.

தற்போது ஹூபை மாகாண அரசின் வினோத உத்தரவால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+