முகமடி அணிந்து பிரசாரம் செய்யும் பாஜக வேட்பாளர் தமிழிசை

தமிழிசை ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அனைத்து கட்சிகாரர்களும் தற்போது வட சென்னையில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் இன்று பாஜகவினர் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொருக்குபேட்டையில் இன்று உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு முகமுடி அணிந்து பிரசாரம் செய்தனர்.
அப்போது தமிழிசை கூறுகையில்,
வடசென்னையில் குப்பைகள் எரிக்கப்படுவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களாலும் காற்று அதிகம் மாசுபட்டுவிட்டது. இதனால் இப்பகுதி மக்களை ஆஸ்துமா தாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த பிரச்சினையை அதிமுக மற்றும் திமுக அரசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. நான் வெற்றி பெற்றால் இந்த பிரச்சினைகளை விரைவில் நீக்குவேன். தொகுதியில் உள்ளவர்கள் நல்ல காற்றை சுவாசிக்க ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைப்பேன் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications