சிறந்த திருநங்கை பட்டம் வென்றார் சேலம் ரிச்சா

தாய் திட்டம்- தமிழ்நாடு தாய் விழுதுகள் பெடரேஷன் சார்பில் இந்தப் போட்டி நேற்று நடந்தது.
வெற்றி பெற்ற ரிச்சாவுக்கு திமுக எம்.பி. கனிமொழி பட்டம் சூட்டினார். சுதாவுக்கு அமைச்சர் பொன்முடியும், அமோகாவுக்கு நகராட்சித் தலைவர் ஜனகராஜும் பட்டம் சூட்டினர்.
முன்னதாக கனிமொழி பேசுகையில், திருநங்கைகள் சமூகத்தாலும், குடும்பத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களில் நடனம் கற்ற திருநங்கை ஒருவரிடம் நிருபர் ஒருவர் பேட்டி எடுக்கும்போது நீங்கள் நடனம் கற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.
பிச்சை எடுத்திருப்பேன், இல்லையேல் என் உடலை விற்று பிழைத்திருப்பேன் என்றார். இது கேட்பதற்கு சங்கடமாக இருந்தாலும், திருநங்கைகளின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்றியது. அவர்களுக்கு நலவாரியம் உருவாக்கி தந்தது.
உலகத்திலேயே திருநங்கைகளை பற்றி கவலைப்பட்ட ஒரே அரசு தமிழக அரசுதான். அவர்களுக்கு, மேலும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும். அவர்கள் வாழ்வில் வளங்களை உருவாக்குவோம் என்றார்.
திருநங்கைகள் தொடர்பான சி.டி. ஒன்றையும் கனிமொழி வெளியிட்டார்.
இன்று விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டியும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications