போரை நிறுத்த இலங்கைக்கு பான் கி மூன் கோரிக்கை
நியூயார்க்: இலங்கையில் உயிருக்கு போராடி வரும் தமிழர்களுக்கு உணவு, மருந்து வினியோகம் செய்வதற்கு உதவும் வகையில் இலங்கை ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என ஐநா பொது செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ராணுவமும் ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து ஐநா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தின. ஆனால், இலங்கை அரசு அதை உடனடியாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஐநா பொது செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சே இடம் நேரடியாக தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்பின்னர் நேற்று நியூயார்க்கில் பான் கி மூன் கூறுகையி்ல்,
இலங்கை பிரச்சினையை தினமும் கவனித்து வருகிறேன். இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசினேன்.
இலங்கையில் போர் பகுதியில் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இல்லாமல் தவிக்கும் தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். இதனால் ஐநா குழுவினருக்கு அப்பகுதியை ஆரய வாய்ப்பு கிடைக்கும்.
மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கனரக ஆயுதங்கள், ஏவுகணைகளை உபயோகப்படுத்த வேண்டாம் என கேட்டுகொண்டேன். அதே நேரத்தில், சிறுவர்களை படைகளில் சேர்ப்பதை, விடுதலைப்புலிகள் தவிர்க்க வேண்டும், போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும்.
இலங்கையில் சர்வதேச மனித உரிமை விதிகள் மதிக்கப்பட வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இலங்கையில் சர்வதேச விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை உலகமே கவனித்து வருகிறது என்றார் பான் கி மூன்.
பான் கி மூனுக்கு இலங்கை வர அழைப்பு...
அதன் பின்னர் கொழும்புவில் ராஜபக்சே நிருபர்களிடம் பேசுகையில்,
ஐநா பொது செயலாளர் பான் கி மூனை இலங்கைக்கு வருமாறு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளேன். அவர் தொலைபேசியில் பேசிய போதும் அவரை மீண்டும் அழைத்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு ராணுவ முகாமில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை வந்த பார்வையிடுமாறு கூறினேன்.
அவர் இலங்கை வந்தால் தமிழர்களுக்கு கூடுதல் உணவுப்பொருள், மருந்து பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அவர் நிவாரண முகாம்களில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
விடுதலைப்புலிகள் பல ஆயிரம் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் எனவும், அதற்கான மனிதாபிமான உதவிகளை செய்யுமாறு அவரிடம் கூறினேன்.
அவர் இலங்கை வரும் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், அவரது வருகையால் இலங்கைக்கும், ஐநாவுக்கும் உள்ள உறவு வலுப்பெறும் என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications