1 கி.மீ. தொலைவில் பிரபாகரனை நெருங்கியது ராணுவம்-நீருக்கடியில் சுரங்கம் கண்டுபிடிப்பு

ஆனாலும் பிரபாகரன் மக்கள் மத்தியில் இருப்பதாலும், அவரைச் சுற்றி 1000 தற்கொலைப் படை வீரர்கள் இருப்பதாலும் ராணுவம் நெருங்க முடியாமல் நிற்கிறது.
விடுதலைப் புலிகள் தற்போது முள்ளிவாய்க்கால் மற்றும் இரட்டை வாய்க்கால் ஆகிய இரு பகுதிகளில் மட்டுமே நிலை கொண்டுள்ளனர்.
இதையடுத்து மற்ற அனைத்துப் பகுதிகளின் வழியாகவும், ராணுவத்தின் 3 பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் சுற்றிச் சூழ்ந்து முன்னேறி வருகிறார்கள்.
ராணுவத்தின் நகர்வைத் தடுக்கும் வகையில் பிரமாண்டமான, வலுவான மண் அரண்களை புலிகள் அமைத்துள்ளனர். இவற்றைத் தகர்ப்பது மிகக் கடினமாக இருப்பதாலும், இப்பகுதியில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாலும் ராணுவத்தின் முன்னேற்றம் வெகுவாகத் தடைப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மண் அரணாகத் தகர்த்த பின்னரே ராணுவத்தால் முன்னேற முடிகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பீரங்கித் தாக்குதலை நடத்தி மண் அரண்களை ராணுவத்தினர் தகர்த்து வந்தனர். நேற்று கரையான் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த மிகப் பெரிய மற்றும் கடைசி மண் அரண் தகர்க்கப்பட்டது.
இதன் மூலம் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் ராணுவம் நுழைந்தது.
தற்போது விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான தூரம் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவுதான். அதாவது 800 மீட்டர் தூரத்தில்தான் விடுதலைப் புலிகள் உள்ளனர்.
அவர்களுடன் கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மத்தியில்தான் பிரபாகரன் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர்களை நெருங்க முடியாதபடி சுற்றிலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. தற்கொலைப் படையினரும் பெரிய அளவில் தாக்குவார்கள் என்பதால் ராணுவம் மெதுவாக முன்னேறி வருகிறது.
சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு..
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் கட்டி வந்த மிகப் பெரிய நீருக்கடியிலான சுரங்கப் பாதையை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
வெள்ள முள்ளிவாய்க்கால் நீர்பரப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை இருந்தது. இன்னும் அது கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றுள்ளது.
முக்கியத் தலைவர்கள் இதன் வழியாக தப்புவதற்காக தோண்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தண்ணீர் உள்ளே புகுந்து விடாமல் தடுக்க இரும்பு அரண்களுடன் கூடியதாக அந்த சுரங்கப் பாதை உள்ளது.
உள்ளே சில சிறு சிறு அறைகளும் கூட உள்ளன. அதி நவீன தொழில்நுட்பத்தில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தவிட்டை சாப்பிடும் தமிழர்கள்..
இந்த நிலையில் புலிகளுடன் இருக்கும் தமிழ் மக்களுக்கு சுத்தமாக சாப்பாடு கிடைக்காத நிலைமை நிலவுகிறது. இதனால் அவர்கள் தவிட்டை சாப்பிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications