அதிமுக வேட்பாளர் தம்பித்துரை வீட்டில் போலீஸ் திடீர் ரெய்டு
கரூர்: கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பித்துரையின் வீட்டில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தம்பித்துரை கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்குச் சொந்தமான வீடு, கரூர் ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது.
நேற்று இரவு பத்தரை மணியளவில் தம்பித்துரை வீட்டுக்கு எஸ்.பி. இளங்கோ தலைமையில் போலீஸார் வந்தனர்.
பின்னர் 12 மணியளவில் ஆர்.டிஓ. ஜெயராமன், தாசில்தார் தர்மராஜ், மற்றும் வருவாய் அலுவலர்கள் அங்கு வந்தனர்.
வாக்களர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக சோதனை நடத்த வந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் அங்கு அதிமுகவினர் குவிந்தனர். சோதனை நடத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாஜி திரேட் ஜெயந்தி கொடுத்த கடிதத்தை அதிமுகவினரிடம் காட்டிய போலீஸார், 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்து சோதனையில் இறங்கினர்.
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பாத்ரூமைக் கூட விடவில்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சோதனையை முடித்துக் கொண்டு அதிகாலை 4 மணியளவில் போலீஸார் சென்று விட்டனர்.