லண்டன் சீன தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டனில் உள்ள சீன தூதரகம் மீது இலங்கைத் தமிழர்கள் தாக்குதல் நடத்தினர்.
மத்திய லண்டனில் உள்ள சீன தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் தூதரகத்திற்கு உள்ளே புக அவர்கள் முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுக்க முயன்றனர். இதையடுத்து தூதரகத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்கினர்.
இதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்ப்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகும் கூட அங்கு தமிழர்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டனர். அங்கு போராட்டத்தை முடித்துக் கொண்டு அனைவரும் நாடாளுமன்ற சதுக்கம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதற்கு முன்பு இந்திய மற்றும் இலங்கை தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications