'இளங்கோவன்'- இளந்தமிழர் இயக்கத்தினர் கைது

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் இயக்குநர் சீமான் ஈரோட்டில் பொதுக்கூட்டத்தி்ல பேசினார். அங்கு போட்டியிடும் இளங்கோவனுக்கு வாக்களிக்கக் கூடாது என்று கோரி நடத்தப்பட்ட கூட்டம் இது.
அக்கூட்டத்தில் பேசிய சீமான், தந்தை பெரியார், காங்கிரசை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால், அவரது பேரனோ காங்கிரசில் இருக்கிறார். அதனால் நான் தான் உண்மையான பேரன் என்றார்.
இதற்கு நக்கலாக பதிலளி்ப்பதாக நினைத்து, நான் தான் பெரியாரின் உண்மையான பேரன். ஆனால் சீமான் தன்னை பெரியாரின் பேரன் என்று சொல்லியிருக்கிறார். பெரியார் இளம் வயதில் செய்த தவறு செய்து விட்டார் என்று நினைக்கிறேன், அதனால்தான் சீமான் அப்படிப் பேசியிருக்கிறார் என்றார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சுக்கு தமிழர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இளந்தமிழர் இயக்கம் என்ற அமைப்பு, இளங்கோவனின் பேச்சைக் கண்டித்து வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தது.
இதனால் இளந்தமிழர் இயக்கத்தினரை போலீசார் கைது செய்துவந்தனர். ஈரோட்டில் உள்ள இளங்கோவன் வீட்டுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை இளந்தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 18 பேர் பன்னீர் செல்வம் பூங்காவிலிருந்து பேரணியாக இளங்கோவன் வீடு நோக்கி கிளம்பினர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இதையடுத்து மேலும் 10 பேர் பேரணியாக வந்தனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட 20 பேர் பேரணியாக வந்தனர். அவர்களை நிறுத்திய போலீஸார் கைது செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
இளங்கோவன் வீடு முற்றுகைப் போராட்டத்தால் ஈரோட்டில் பதட்டமாக உள்ளது.












Click it and Unblock the Notifications