கார்த்திக், சரத் ஆதரவு கிடைத்தது முக்கிய மைல் கல்: கிருஷ்ணசாமி
தென்காசி: எனக்கு ஆதரவாக சரத்குமார், கார்த்திக் கட்சி தொண்டர்கள் களம் இறங்கி இருப்பது வரலாற்றில் முக்கிய மை கல் என புதிய தமிழகம் கட்சியின் தென்காசி வேட்பாளரான அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
தென்காசி தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமியை ராஜபாளையத்தில் நாடாளும் மக்கள் கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தனர்.
மேலும் ராஜபாளாயம் ஆண்டத்தம்மன் கோவில் மறவர் பொது சபை தலைவர் கதிர்வேல் மற்றும் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு நடிகர்கள் கார்த்திக், சரத்குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் களம் இறங்கியுள்ளனர்.
ராஜபாளையத்தில் பெரும்வாரியான மக்கள் கொண்ட ஆண்டத்தம்மன் கோவில் மறவர் பொது சபையினர், அதன் தலைவர் கதிர்வேல் தலைமையில் என்னை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதை நான் என்றும் மறக்க மாட்டேன். வரலாற்றில் இது ஒரு முக்கிய மை கல் ஆகும் என்று உருக்கமாக கூறினார்.