ஆபாச போஸ்டர்-அஸம்கான் மீது ஜெயப்பிரதா புகார்

உ.பி. மாநிலம் ராம்பூரில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட அமர்சிங் பெருவாரியான விருப்பத்தை தெரிவித்தார் முலாயம் சிங் யாதவிடம். ஆனால் இதை கடுமையாக எதிர்த்தார் அஸம்கான். இதனால் அமருக்கம், அஸமுக்கும் இடையே மோதல் மூண்டது. இருப்பினும் முலாயிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஜெயப்பிரதாவுக்கு சீட் வாங்கி விட்டார் அமர்.
இருந்தாலும் விடாத அஸம்கான் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார். ராம்பூர், அஸம்கானின் சொந்த ஊர் என்பதால் ஜெயப்பிரதாவின் பிரசாரத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் அமர்சிங்கின் துணையுடன்தான் ஜெயப்பிரதா இங்கு அஸமின் எதிர்ப்பை சமாளித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அமர்சிங், அஸம்கான் மோதல் மேலும் மேலும் முற்றி வரும் நிலையில் அஸம்கான் மீது பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார் ஜெயப்பிரதா.
தான் நிர்வாணமாக இருப்பது போன்ற போஸ்டர்களை தொகுதிக்குள் சுற்றுக்கு விட்டு வருகிறார் அஸம்கான் என்பதே அவரது குற்றச்சாட்டு.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை நான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் போகிறேன்.
எனது நிர்வாண போஸ்டர்களை தொகுதி முழுவதும் அனுப்பி வருவது மிகவும் தரக்குறைவான, கீழ்த்தரமான செயலாகும்.
ஏற்கனவே என்னைப் பற்றிய அவதூறு ஆபாச சிடிக்களை தொகுதி முழுவதும் அவர்கள் விநியோகித்தார்கள். இப்போது ஆபாச போஸ்டர்களை அனுப்பி வருகின்றனர்.
இதை நான் வெறுக்கிறேன். ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தக் கூடாது. இப்படி செய்தால் நாளை எந்தப் பெண்ணும் அரசியலுக்கு வரத் தயங்குவார்.
என்னை மக்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கின்றனர். ஆனால் கட்சிக்குள் இருக்கும் சிலரே இப்படி நடந்து கொள்வது வேதனையைத் தருகிறது. இது மிகவும் ஏமாற்றமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது.
அஸம்கான் எனக்கு அண்ணன் மாதிரி. ஆனால் அவரோ இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். பெண்களை அவமதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளன.
அவர்கள் வெளியிட்ட ஆபாச சிடியை நான் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் ஆபாச போஸ்டரைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். அது மிகவும் மோசமான ஒன்றாக உள்ளது என்றார் ஜெயப்பிரதா.
உ.பி. அரசியலில் அஸம்கான், அமர்சிங் இடையிலான மோதல் பெருமளவுக்கு கட்சிப் பெயரை நாறடித்து வருவது குறித்து யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் கட்சித் தலைவர் முலாயம் சிங் பெருத்த அமைதியாக இருக்கிறார்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications