For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மீண்டும் தாக்குதல் - 20 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனை 2 நாட்களில் 2வது முறையாக இன்றும் தாக்கப்பட்டது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உள்ள இந்த ஒரு மருத்துவமனை மட்டுமே போர்ப் பகுதியில் பரிதவிக்கும் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நேற்று காலை ராணுவம் எறிகணை குண்டுகளை வீசித் தாக்கியதில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் இலங்கைப் படைகள் இங்கு தாக்குதல் நடத்தின. இதில், 20 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாக அதிகாரியான டாக்டர் செல்வராஜா கூறியுள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது. பீரங்கிகளால் ராணுவம் கடுமையாக தாக்கியதாகவும், அதில் ஒரு குண்டு நிர்வாக அலுவலகத்திற்குள் வந்து விழுந்ததாகவும், இன்னொரு குண்டு, நோயாளிகள் உள்ள பகுதியில் விழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X