அப்துல் கலாம் மாதிரி வருவேன்-ஈரோடு மாணவர்
சென்னை: தமிழகத்தி்ல் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த நான்கு மாணவர்களில் ஒருவரான ஈரோட்டை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்ற மாணவர் அப்துல் கலாம் மாதிரி மிகப்பெரிய விஞ்ஞானியாக வருவேன் என தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்துக்கு அருகில் உள்ள செங்குட்டை பகுதியில் வசித்து வருபவர் முருகசாமி. ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் லிங்கேஸ்வரன் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலே முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.
அவர் தமிழில் 193, ஆங்கிலத்தில் 193, இயற்பியலில் 199, வேதியியலில் 199, கம்ப்யூட்டர் சயின்சில் 200, கணிதத்தில் 199 மதிப்பெண்கள் என மொத்தம் 1183 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தனது எதிர்கால கனவு குறித்து அவர் கூறுகையில்,
எலக்ட்ரானிக்ஸ் துறையில் தான் எனக்கு ஆர்வம் அதிகம். மின்னணு என்ஜினியராகி இந்தியாவை செய்ற்கோள் தொழில்நுட்பத்தி்ல் முதலிடத்துக்கு கொண்டு வருவதே என் லட்சியம். ஏரோனாடிக்கல் என்றால் அப்துல் கலாம் ஞாபகத்துக்கு வருவதை போல எலக்ட்ரானிக்ஸ் என்றால் எனது பெயர் நினைவுக்கு வர வேண்டும். அந்த அளவுக்கு மிகப்பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications