தீப்பெட்டியால் வறுமையை எரித்த விருதுநகர் மாணவி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: வறுமை காரணமாக தீப்பெட்டி ஒட்டி கொண்டே படிப்பில் கவனம் செலுத்திய விருதுநகர் மாணவி ஒருவர் ஹோம் சயின்ஸ் பாடத்தில் 192 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி மகாலட்சுமி. நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் அவர் ஹோம் சயின்ஸ் பாடத்தில் 192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.
இது குறித்து மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவர் கூறுகையில்,
எனது தாயார் தீப்பெட்டி ஒட்டி தான் எங்களை காப்பாற்றி வந்தார். தினமும் பள்ளி முடிந்து வந்ததும் நானும் தீப்பெட்டி ஒட்டி, எனது தாயாருக்கு உதவியாக இருப்பேன். அடுத்து ஆசிரியை பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிக்க இருக்கிறேன். ஆசிரியை ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.












Click it and Unblock the Notifications