அடுத்த ஆட்சி-தீவிர ஆலோசனையில் ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்த தீவிர ஆலோசனையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இறங்கியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர்கள், இதுதொடர்பாக மேற்கொண்ட முடிவுகளை அவர் பரிசீலித்து வருகிறார். சட்ட ஆலோசனைகளையும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகைத் தகவல்கள் கூறுகையில், முந்தைய குடியரசுத் தலைவர்கள், ஆட்சியமைப்பு தொடர்பாக எடுத்த முடிவுகள், மேற்கொண்ட நடைமுறைகளை குடியரசுத் தலைவர் ஆய்ந்து வருகிறார். இதுதொடர்பான சட்ட ஆலோசனைகளையும் அவர் கேட்டு வருகிறார்.
தேர்தல் நடைமுறைகள், மீடியா செய்திகள் ஆகியவற்றையும் அவர் கூர்ந்து கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பின்னர் அவர் சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை கேட்பார் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications