ஸ்ரீபெரும்புதூரில் 'திக்கித் திணறி' வென்ற டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்: பெரும் போராட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாகப் போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூரில் வெற்றி பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.
தென் சென்னை தொகுதியிலிருந்து முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாறி வந்து போட்டியிட்டார் பாலு. அவரை எதிர்த்து வலுவான வேட்பாளராக பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி நிறுத்தப்பட்டார்.
இதனால் போட்டி கடுமையாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே மூர்த்தியும், பாலுவும் மாறி மாறி முன்னணியில் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் பாலு தோல்வி அடைந்து விடக் கூடிய அளவுக்கு நிலைமை இருந்தது.
இந்த நிலையில் கடைசிக் கட்ட சுற்றுக்குளில் வேகமாக முன்னேறி விட்டார் பாலு.
இறுதியில், 25 ஆயிரத்து 544 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications