தேசிய கட்சி அந்தஸ்து-பறிகொடுக்கும் அபாயத்தில் சிபிஐ
டெல்லி: பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இடதுசாரிகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் இந்த தேர்தலில் பெரும் ஓட்டை விழுந்து சுனாமி போல காங்கிரஸ் கூட்டணி உள்ளே பாய்ந்து இடதுசாரிகளை சின்னாபின்னமாக்கி விட்டது.
இந்த மாநிலங்களிலேயே இந்த நிலை என்றால் பிற மாநிலங்கள் குறித்துக் கூறத் தேவையில்லை. தமிழகத்தில் ஏற்கனவே இருந்து வந்த தொகுதிகளை இழந்து இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சிஸ்ட்டும் சேர்ந்து மொத்தமே இரு தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளன.
அதேபோலத்தான் ஆந்திரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பீகார் என பல மாநிலங்களிலும் கவலைக்கிடமான நிலையில் உள்ளன இடதுசாரிகள்.
தமிழகத்தில் நான்கு சீட்களை இடதுசாரிகள் இழந்துள்ளன. அதேபோல ஆந்திரா,
தமிழகத்தில் சிபிஎம் இதுவரை வைத்திருந்த மதுரை, கன்னியாகுமரியை இழந்து விட்டது. அதேபோல சிபிஐ தென்காசியில் மட்டும் வென்று நாகை, வட சென்னையில் தோற்றுள்ளது.
இந்தப் பெரும் தோல்வியால் சிபிஐக்கு தேசிய கட்சிக்கான அந்தஸ்து பறிபோகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. காரணம், தேசியக் கட்சியாக நீடிக்கத் தேவையான வாக்கு சதவீதத்தையும், எம்.பிக்களின் எண்ணிக்கையையும் அது பெருமளவில் இழந்துள்ளது.












Click it and Unblock the Notifications