பிரகாஷ் காரத் விலக மாட்டார்: சிபிஎம்
டெல்லி: தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து பிரகாஷ் காரத் விலக மாட்டார், தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிபிஎம்மின் பொலிட்பீரோ கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் பதவி விலக வேண்டும் என பொலிட்பீரோ உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அதுபோல யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்று கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களான நிரூபம் சென், மாணிக் சர்க்கார் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,அந்தக் கேள்விக்கே இடமில்லை. மேற்கு வங்க முதல்வர் புத்ததேவைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத்தே நீடிப்பார். இதற்கு பொலிட்பீரோவும் அனுமதி அளித்து விட்டது.
மேலும், புத்ததேவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்ற தகவலும் தவறானது. அவர் அப்படிப்பட்ட எண்ணத்தில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும்..
அதே போல கொஞ்சம் கூட சுயமாக யோசிக்காமல் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பர்தனுக்கும் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications