ஸ்ரீபெரும்புதூர் போக வேண்டாம் - சோனியா குடும்பத்துக்கு ஐபி எச்சரிக்கை
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதால், ராஜீவ் காந்தி நினைவு நாளன்று ஸ்ரீபெரும்புதூர் போக வேண்டாம். அங்கு தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக இந்திய உளவுப் பிரிவு, சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஒரு விதமான இறுக்க நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் வரும் 21ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 18வது ஆண்டு நினைவு நாள் வருகிறது.
அன்றைய தினம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் இலங்கையில் அசாதாரண நிலை நிலவுவதாலும், விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாலும், ஸ்ரீபெரும்புதூர் போக வேண்டாம் என சோனியா குடும்பத்தினரை ஐபி எச்சரித்துள்ளது.
இருப்பினும் இதுவரை சோனியா குடும்பத்தின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் குறித்த தகவல் ஏதும் இல்லை.
ஸ்ரீபெரும்புதூரில்தான் 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப் பலியானார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications