அதிகரிக்கும் சீனப் பொருட்களின் இறக்குமதி: ரிசர்வ் வங்கி கவலை
Subscribe to Oneindia Tamil

கடந்த 2006-07ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சீனாவிவிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு இரு மடங்காக உயர்ந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2006-07ம் ஆண்டில் 12.64 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி அளவு, 2008-09 ஆம் ஆண்டில் 24 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் சீனத்துப் பொருள்களை தேக்கி வைக்கும் இடமாக இந்தியா மாறி வருவதாகவும் உள்நாட்டு உற்பத்திக்கான சந்தை இந்தியாவில் குறைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதைத் தடுக்கவே, சீனப் பொருட்களின் இறக்குமதி மீதான வரிகளை விதித்துள்ளதாகக் கூறியுள்ளது.
பொம்மைகள், நைலான் பொருட்கள், உதிரி பாகங்கள் போன்ற பொருட்களின் இறக்குமதி மீது இன்னும் வரிகள் விதிக்கவும் ஆராயப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications