ஜனாதிபதி அழைப்பு-22ம் தேதி அரசு பதவியேற்பு
டெல்லி: மத்தியில் ஆட்சியமைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்கிறது.
முன்னதாக இன்று மாலை ஜனாதிபதியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
தங்களுக்கு மொத்தம் 322 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகவும், தங்களது கூட்டணியைச் சேர்ந்த 270 எம்பிக்கள், 4 சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து இத்தனை எம்பிக்களின் ஆதரவு உள்ளதாகவும் கூறி அதற்கான கடிதங்களைக் கொடுத்தனர்.
இதையடுத்து அவரை ஆட்சியமைக்க வருமாறு ஜனாதிபதி கடிதம் தந்தார்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய சோனியாவும் மன்மோகனும், நாளை மறுதினம் எங்களது அரசு பதவியேற்கும் என்று அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications