ஊட்டியில் 22 முதல் மூன்று நாள் மலர் கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

Flower Show in Ooty
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வரும் மே 22ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

தமிழகத்தின் கோடை வாசஸ்தலமான ஊட்டியில் ஆண்டு தோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடக்கும். இந்த ஆண்டு மலர் கண்காட்சி வரும் 22ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறு.

மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவின் நுழைவாயில் பகுதியில் சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் 10 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கும் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளது.

சால்வியா, பெட்டுனியா, சாப்பனெரியா, மெரி கோல்டு, பேன்சி, பிளாக்ஸ், குட்டைரக சூரியகாந்தி, ஸ்டேடிஸ், நிமீசியா போன்ற மலர்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

இந்த மலர் கண்காட்சியில், இரண்டரை லட்சம் மலர் செடிகளில் மலர்கள் மலர்ந்து சுற்றுலா வருபவர்கள் வரவேற்க காத்துள்ளன. சுற்றுலா பயணிகளை கவர, கார்னேசன் மலர்கள் மூலம் புஷ்பக விமானம் நீலகிரி மலை ரயில் மற்றும் வள்ளுவர் கோட்டம் மாதிரிகள் அமைக்கப்படுகின்றன.

மலர்கள், காய்கறிகள், கனி வகைகள், மருத்துவச் செடிகள், மலர் செடிகள் மலர் அலங்காரப் போட்டி களில் 220 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் 15 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த விழாவில், வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். நீலகிரி லோக்சபா தொகுதி எம்.பி. ராஜா, ஊரக வளர்ச்சித்துறை அமைசசர் பொங்கலூர் பழனிசாமி, கதர்வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+