பிரபாகரன்:ஒரு வாரம் துக்கம்-கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவமும், அரசும் அறிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தியை விடுதலை புலிகள் அமைப்பு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந் நிலையில் இது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில்,
பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோனியின் வீர மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுடப்படும். ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications