For Daily Alerts
Just In
லண்டனில் போராட்டம்-10 தமிழர்கள் கைது
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்திய போக்குவரத்தை சீர்குலைத்ததாக பத்து தமிழர்களை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அங்கு தினசரி படுகொலையாகி வரும் அப்பாவி மக்களைக் காக்கக் கோரியும் லண்டனில், நாடாளுமன்றம் அருகே தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர் தமிழர்கள்.
நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே சாலைகளை மறித்துப் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் சிலருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில போலீஸார் காயமடைந்ததாக தெரிகிறது.
இதையடுத்து பத்து தமிழர்களை போலீஸார் கைது செய்தனர். பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதாக அவர்கள் மீது போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
arrest கைது உலகம் world இங்கிலாந்து விடுதலைப் புலிகள் நாடாளுமன்றம் போராட்டம் agitation இலங்கைத் தமிழர்கள் genocide இனப்படுகொலை parliament land grabbing case
Story first published: Wednesday, May 20, 2009, 12:37 [IST]