சென்னை தொழிலதிபர் வீட்டில் 450 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை: சென்னையை சேர்ந்த தொழலதிபர் வீட்டில் 450 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
சென்னையில் பாரிமுனை பகுதியில் இரும்பு ஏற்றுமதி வியாபாரம் செய்து வருபவர் ராஜேந்திரன் (40). இவரது இரும்பு ஏற்றமதி நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லியிலும் ஒரு கிளை உள்ளது.
இவரது வீடு வளசரவாக்கம் ஜெயராம் காலனியில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தாருடன் செங்குன்றத்தில் இருக்கும் தனது தங்கை வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர்களை வீட்டை பூட்டு சென்றதை நன்றாக கவனித்த மர்ம கும்பல் ஒன்று வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. பின்னர் வீட்டிலிருந்த 450 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இரவு வீட்டுக்கு திரும்பிய ராஜேந்திரன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், லாக்கரில் இருந்த 450 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications