திருப்பூரில் ஆயத்த ஆடை கண்காட்சி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குளிர் மற்றும் கோடை காலங்களுக்கான பனியன் ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற்றது.
இந்தியா நிட்பேர் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பில் அவிநாசி அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில், டில்லி, மும்பை, லூதியானா, அகமதாபாத், திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 52 முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் , அரங்குகள் அமைத்து கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில், சுவிட்சர்லாந்து, துருக்கி, சிங்கப்பூர், பிரிட்டன், ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 39 வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ,மற்றும் 129 ஏஜன்சியினர் கண்காட்சியை ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பருத்தி நூல்களுடன் கலப்பினம் செய்து உற்பத்தி செய்த பனியன் ஆயத்த ஆடைகள் அதிகமாக கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. அத்துடன் நான்-ஓவன் துணிகளில் தயாரிக்கப்பட்ட ஆடைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி பற்றி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் வசந்த்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது , கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற கண்காட்சியில், 250 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தக ஒப்பந்தம் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications