For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்எஸ்எல்சி மறுகூட்டல்: ஜூன் 1ல் விண்ணப்பிக்கலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டல் செய்ய விரும்புபவர்கள் 1-ந் தேதி முதல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு தேர்வு இயக்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க 5-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

எஸ்.எஸ்.எல்.சி., ஒ.எஸ்.எல்.சி. மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய ரூ. 305 கட்டணம் ஆகும். மற்ற பாடங்களுக்கு ரூ. 205. மெட்ரிக்குலேசன் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 305, ஆங்கிலோ இந்தியன் மொழி பாடத்திற்கு ரூ. 205-ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 305ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலையில் சிறப்புத் தேர்வு...

மார்ச் மாதம் தேர்வு எழுதியவர்களில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங் களில் தோல்வி அடைந்து இருந்தால் ஜுலையில் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்பம் 1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தனித் தேர்வர்களும் 2009 மார்ச் மாதத்திற்கு முன்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களும் இந்த சிறப்பு துணை தேர்வை எழுதலாம். சிறப்பு துணை தேர்வு ஜுலை 3ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது என்று தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X