பார்தி-எம்டிஎன்: 23 பில்லியன் டாலர் 'மெகா' இணைப்பு!
மும்பை: தென்னாப்ரிக்காவின் எம்டிஎன் தொலைபேசி நிறுவனதுடனான இணைப்பு முயற்சியில் மும்முரமாக இறங்கிவிட்டது இந்தியாவின் பார்தி ஏர்டெல்.
பாரதியும் எம்டிஎன்னும் 23 முதல் 26 பில்லியன் டாலர் வரை தங்களுக்குள் முதலீடு செய்ய உள்ளன.
இரு நிறுவனங்களும் இணைப்பு குறித்து பேசுவது இது முதல் முறையல்ல. இந்த புதிய அமைப்பின் தலைமைப் பொறுப்பு மற்றும் கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பதில் இரு நிறுவனங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டதால், முன்பு நடந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
இப்போதைய பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் 200 மில்லியன் மொபைல் சந்தாதாரர்களைக் கொண்ட புதிய தொலைத் தொடர்பு நிறுவனம் உருவாக்கப்படும். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள 24 நாடுகளில் இந்த சந்தாரர்கள் பரந்து விரிந்திருப்பார்கள்.
இந்த புதிய நிறுவனத்தின் கட்டுப்பாடு பெரும்பாலும் பார்தி ஏர்டெல்லிடம் இருக்கும். அதே நேரம் பார்தி நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் எம்டிஎன் பிரதிநிதிகள் இடம்பெறுவர். கணக்குகள் அனைத்தையும் எம்டிஎன் பார்வையிடும் அதிகாரம் பெறுகிறது.
தனிப்பட்ட முறையில் எம்டிஎன் நிறுவனம் 27 பில்லியன் டாலர் மதிப்புள்ளது. பார்தி ஏர்டெல் 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனம். இந்த இரண்டும் இணைந்து உருவாக்கும் புதிய நிறுவனம் உலகின் டாப் 10 மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவின் எல்லைக்கு வெளியே நடக்கும் மிகப் பெரிய நிறுவன இணைப்பு இதுவே. டாடாவின் கோரஸ் ஸ்டீல் இணைப்பை விட கிட்டத்தட்ட இருமடங்கு பெரிய டீல் இது என்கிறார்கள் தொழில் துறை வல்லுநர்கள்.
இந்த இணைப்பு மூலம், எம்டிஎன்னின் 49 சதவிகித பங்குகளை பார்தி நிறுவனம் பெறும். அதேபோல பார்தியின் 36 சதவிகித பங்குகளை எம்டிஎன் பெறும்.
"இது பரஸ்பர லாபம் தரும் ஒரு ஒப்பந்தம். மார்க்கெட் மதிப்பு மற்றும் அளவில் எங்கள் நிறுவனங்களின் பங்கை அதிகரிக்க இது ஒரு நல்ல வழி," என்கிறார் பார்தி நிறுவன சேர்மன் சுனில் பார்தி மித்தல்.
இணைப்பு குறித்த விரிவான தகவல்களை ஜூலை 31க்குள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்டிஎன் நிறுவனம் ஏற்கெனவே இணைப்புக்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் பேசி வந்தது. ஆனால் அனில் - முகேஷ் அம்பானிகள் சண்டையால் அந்த முயற்சி கைகூடவே இல்லை.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications